search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை நகை பறிப்பு"

    கொள்ளையர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    கோவை:

    கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த மாமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 45). கார் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    நேற்று காலை இவரை தொடர்பு கொண்ட வாலிபர் ஒருவர் தனக்கு குறைந்த விலையில் கார் வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு கார் இருப்பதாக சேகர் கூறவும், அதற்கு அந்த வாலிபர் காரை எடுத்து கொண்டு திருப்பூர் மாவட்டம் தளி பகுதிக்கு வர சொன்னார்.

    அங்கு சென்ற சேகரை அங்கு தயாராக நின்றிருந்த 4 வாலிபர்கள் தாக்கி, மிரட்டி அவரது கார் மற்றும் அணிந் திருந்த 4 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பியோடினர். இதுகுறித்து தளி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராபின் ராஜ் (24), அருள்ராஜ் (28), சேவாக் (20), மரியாஅபின் ஆகியோரை பொள்ளாச்சியில் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    இதற்கிடையே கொள்ளையர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. வியாபாரியை தாக்கி காரை பறித்து சென்ற சம்பவம் குறித்து தளி போலீசார் திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட போலீசாருக்கு தெரியப்படுத்தினர்.

    அப்போது கொள்ளையர்கள் 4 பேரும் காரில் தளியில் இருந்து உடுமலை வழியாக பொள்ளாச்சி நோக்கி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக பொள்ளாச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்களை உஷார்படுத்தினர்.

    பொள்ளாச்சி போலீசார் திப்பம்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக குறிப்பிட்ட அந்த கார் வந்தது. இதையடுத்து போலீசார் அந்த காரை மறிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். போலீசார் நிற்பதை பார்த்த கொள்ளையர்கள் காரை நிறுத்தாமல் வேகமாக இயக்கி சென்றனர்.

    உடனடியாக போலீசார் வாகனத்தில் கொள்ளையர்களை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். சினிமா காட்சியில் வருவது போல் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் அவர்களை விரட்டி சென்று சின்ன பாளையம் பகுதியில் காரை மடக்கினர்.

    போலீசார் மறித்ததும் அதிர்ச்சியான கொள்ளையர்கள் காரை திறந்து தப்பியோட முயற்சித்தனர். ஆனால் அதற்குள் போலீசார் காரை சுற்றி வளைத்து 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். கொள்ளையர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. போலீசாரின் இந்த செயலை பொதுமக்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

    கோவை அருகே தாய், மகளை கத்தி முனையில் மிரட்டி நகையை பறித்து சென்ற முகமூடி கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சூலூர்:

    கோவை சூலூர் அருகே உள்ள கருமத்தம் பட்டி பிருந்தாவன் கார்டன் பகுதியில் வசித்து வருபவர் முரளி. கருமத்தம் பட்டியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி பிரியலதா (36). நேற்று இரவு 9 மணியளவில் முரளி அப்பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்று விட்டார். வீட்டில் பிரியலதா அவரது மகள் ராகவி, பிரியலதா தாய் ஆகியோர் இருந்தனர்.

    அப்போது 3 பேர் கும்பல் அங்கு வந்தது. அவர்கள் முகமூடி மற்றும் கையுறை அணிந்திருந்தனர். மேலும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்தனர். அக்கும்பல் பிரியலதா மற்றும் அவரது மகள் ராகவியை கத்தி முனையில் மிரட்டி நகையை தருமாறு கேட்டனர்.

    இதற்கு பிரியலதா மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் பிரியலதா, அவரது மகள் ராகவி ஆகியோரை மிரட்டி நகையை பறித்தது.

    பிரியலதாவிடம் மூன்றரை பவுன் நகையும், ராகவி அணிந்திருந்த 2 பவுன் செயின்,கம்மல், மோதிரம் உள்ளிட்ட வைகையும் பறித்தது. தாய்- மகளிடம் இருந்து ஏழரை பவுன் நகையை பறித்து கொண்டு அக்கும்பல் அங்கிருந்து சென்று விட்டது. இது குறித்து கருமத்தம் பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    தகவல் கிடைத்ததும் கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடைபெற்ற வீட்டை மோப்பம் பிடித்து விட்டு சற்று தூரம் ஓடி நின்றது.

    கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். சூலூர் பகுதியில் தொடர் கொள்ளை, நகை பறிப்பு சம்பவம் நடைபெற்று வந்தது. தற்போது அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் கொள்ளையர்கள் கருமத்தம்பட்டி பகுதியில் கைவரிசை காட்டி உள்ளனர்.

    எனவே கொள்ளை சம்பவத்தை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×